தூத்துக்குடி, ஆக.10- மத்திய அரசின் புதிய கல்விக் கொள் கையை உடனே ரத்து செய்ய வேண்டும், சுற்றுச்சூழல் மறுவரையறை சட்டத்தை ரத்து செய்ய வேண்டும் உள்ளிட்டவை வலியுறுத்தி தூத்துக்குடியில் அனைத்திந்திய இளைஞர் பெரு மன்றம் சார்பில் மாவட்டச் செயலாளர் பெ.சந்தனசேகர் தலைமையில் போல்டன்புரத்தில் உள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட அலுவலகம் எதிரே கண்டன ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. இதில் இளைஞர் பெருமன்றத்தி னர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கமிட்டனர்.