tamilnadu

சொந்த மாநிலத்திற்கு அனுப்பக் கோரி சென்னை சில்க்ஸில் பணிபுரியும் திரிபுரா ஊழியர்கள் முற்றுகை

தூத்துக்குடி, ஜூன் 27- தூத்துக்குடியில் “தி சென்னை சில்க்ஸ்” ஜவுளி கடையில் வேலைபார்த்து வரும் திரிபுரா மாநி லத்தைச் சேர்ந்த ஊழி யர்கள்  திடீரென முற்றுகை யிட்டனர். தூத்துக்குடி விஇ சாலை யில் “தி சென்னை சில்க்ஸ்”  ஜவுளிக்கடை மற்றும் குமரன் நகைக் கடை இயங்கி வரு கிறது. இங்கு திரிபுரா மாநி லத்தைச் சேர்ந்த 27 பேர் வேலைபார்த்து வரு கின்றனர். இவர்கள் தங்களை  சொந்த மாநிலத்திற்கு அனுப்பி வைக்க நடவ டிக்கை எடுக்க கோரி சென்னை சில்க்ஸ் நிர்வாகத்திடம் வலியுறுத்தி வந்தனர். இதுகுறித்து நிர்வா கத்தினர் நடவடிக்கை எடுக்கவில்லை. இந்நி லையில், அவர்கள் அனை வரும் தூத்துக்குடி பழைய பேருந்து நிலையத்தில் முற்றுகையிட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்து வந்த மத்திய பாகம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சங்கர் தலைமையிலான போலீசார் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர், அவர்கள் அனை வரும் மீண்டும் சென்னை சில்க்ஸ் நிறுவனத்திற்கே அனுப்பி வைக்கப்பட்டனர். அப்போது அவ்வழியே காரில் சென்ற சார் ஆட்சியர் சிம்ரன் ஜித் கலோன், இது குறித்து விசாரணை நடத்தி னார். பின்னர் திரிபுார மாநி லத்தவர்களை சொந்த ஊருக்கு அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார். தொ டர்ந்து சென்னை சில்க்ஸ்  நிர்வாகத்தினர் ஊழியர்க ளிடம் பேச்சுவார்த்தை நடத்தி  வருகின்றனர்.

;