தூத்துக்குடி,மே 23-தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி குருமலை வனப்பகுதியில் ஏராளமான புள்ளி மான்கள் வசித்து வருகின்றன. தற்போது வனப்பகுதிகளில் கடும் வறட்சி நிலவுவதால், புள்ளிமான்கள் தண்ணீரைத் தேடி, மலை அடிவாரபகுதிகளில் உள்ள விளைநிலங்களுக்கும், குடியிருப்புப் பகுதிகளுக்கும் வருகின்றன. இந்நிலையில், நாலாட்டின்புதூரில் நாய்கள் கடித்து குதறியதில் உயிருக்குப் போராடிக்கொண்டிருந்த புள்ளி மானை அப்பகுதிமக்கள்மீட்டு வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர்.