tamilnadu

டெண்டர் தராததால்  ஆணையருக்கு கொலை மிரட்டல்

தூத்துக்குடி, மார்ச் 21- திருச்செந்தூர் பஞ்சாயத்து யூனியன் ஆணையருக்கு கொலை மிரட்டல் விடுத்த ஒப்பந்ததாரரை போலீசார் தேடி வருகின்றனர். தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் பஞ்சாயத்து யூனியன் அலுவலகத்தில் சந்தோசம் என்பவர் (47) ஆணையாளராக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில், திருச்செந்தூர் தோப்பூர் அம்பேத்கர் தெருவைச் சேர்ந்த ஏசுவடியான் மகன் நாகலிங்கம் என்பவர் கட்டிட ஒப்பந்தம் கோரி விண்ணப்பித்திருந்தார். ஆனால் அவரது ஒப்பந்தத்தை நிராகரித்து, அலெக்ஸாண்டர் என்ப வருக்கு டெண்டர் கொடுத்து ஆணையர் உத்தரவிட்டார். இதனால் நாகலிங்கம் பஞ்சாயத்து யூனியன் அலுவலகத்திற்குள் புகுந்து ஆணையாளரை பணி செய்ய விடாமல் தடுத்து அவருக்கு கொலை மிரட்டல் விடுத்தார். இதுகுறித்து ஆணையாளர் சந்தோசம், திருச்செந்தூர் காயல் நிலையத்தில் புகார் செய்துள்ளார். அவரது புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் முத்துராமன் வழக்குப் பதிந்து ஒப்பந்ததாரர் நாகலிங்கத்தை தேடி வருகிறார்.