தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம் வல்ல நாடு மனக்கரை வனப்பகுதியில் ஸ்ரீவைகுண் டம் இரட்டை கொலை வழக்கு தொடர்பாக அப் பகுதியைச் சேர்ந்த பிரபல ரவுடி துரைமுத்து என்ப வர் வனப்பகுதியில் பதுங்கியிருப்பதாக தகவல் கிடைத்தது. இதை தொடர்ந்து ஆழ்வார்திரு நகரி காவல் உதவி ஆய்வாளர் முருகப்பெருமாள் தலைமையில் தலைமைக் காவலர் சுப்பிரமணி யன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது ரவுடி துரைமுத்து, அவரது நண்பர் பலவேசம் ஆகியோர் போலீசாரை நோக்கி வெடி குண்டு வீசி உள்ளனர். இதில் நாட்டு வெடிகுண்டு வெடித்து தலைமைக் காலவர் சுப்பிரமணியன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.இந்த சம்ப வம் தொடர்பாக தூத்துக்குடி காவல் கண்காணிப் பாளர் ஜெயக்குமார் நேரில் சென்று விசாரணை நடத்தினார். இந்த சம்பவத்தில் மேலும் ஒரு போலீஸ்காரர் காயம் அடைந்து உள்ளார். அப்பகு தியில் ஆயுதங்களுடன் நின்ற வாகனம் ஒன்றை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.காவலர் மீது வெடிகுண்டு வீசி கொலை செய்த ரவுடி துரைமுத்து என்கவுண்டர் செய்யப்பட்டதாக தகவல் வெளி யாகியுள்ளது.