tamilnadu

img

கொரோனா தொற்று அதிகம்: தீவிர நடவடிக்கை கோரி மனு

தூத்துக்குடி, ஜூன் 24- தூத்துக்குடி ஒன்றியம் மாப்பிள்ளையூரணி பஞ்சாயத்து பகுதியில்  கொரோனா நோய்த் தொற்று அதிகமாக உள்ளதால் அரசு நிர்வாகம் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். அனைத்து தெருக்களுக்கும் கிரு மிநாசினி தெளிக்க வேண்டும். சுண்ணாம்பு போட வேண்டும். அனைத்து  தெருக்களிலும் சுகாதாரமாக முறையில் கூடுதலான குடிநீர் தொட்டி அமைக்க வேண்டும். கொரோனா நோய்த்தொற்று உள்ளவர்களை உடனடி யாக கொண்டு செல்ல ஆம்புலன்ஸ் ஏற்பாடு செய்ய வேண்டும் என்பன  உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி  தூத்துக்குடி ஒன்றியச் செயலாளர் சங்கரன், தாளமுத்துநகர் செயலாளர் எஸ்.ஐயப்பன், எம்ஜிஆர் நகர் கிளைச் செயலாளர் ஆர்.ஜெகதீஸ்வரன்  மற்றும் முருகேசன் ஆகியோர் பஞ்சாயத்து தலைவர் ஆர்.சரவணகுமா ரிடம் மனு அளித்தனர். ஊராட்சி செயலாளர் ஜெயரத்தினம் உடனி ருந்தார்.