தூத்துக்குடி, ஜூன் 22- ஊரடங்கு காலத்தில் சலூன் தொழி லாளர்களுக்கு ரூ. 2 ஆயிரம் வழங்கப்ப டும் என்று தமிழக முதல்வர் மே 16 அன்று அறிவித்ததை அரசாணையாக வெளி யிட்டு அமல்படுத்தக் கோரி தூத்துக்குடி மாவட்ட மருத்துவர் மற்றும் முடி திருத்து வோர் சங்கம் சார்பில் மாவட்டம் முழுவ தும் ஞாயிறன்று சலூன் கடைகள் முன்பு கோரிக்கை அட்டை ஒட்டி கருப்பு பேட்ஜ் அணிந்து பணிபுரிந்தனர். தூத்துக்குடியில் எட்டயபுரம் ரோடு, சிஐடியு அலுவலகம் முன்பு மாவட்டத் தலைவர் ராஜா தலைமையில் ஆர்ப்பா ட்டம் நடைபெற்றது. சிஐடியு மாநிலச் செயலாளர் ரசல், சிஐடியு நிர்வாகிகள் சங்கரன், முத்துகிருஷ்ணன், ஆறு முகம், முருகன், சங்க மாவட்டச் செயலா ளர் நாகராஜ் மற்றும் சதாசிவம், சர வணன், வேல்முருகன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
திருச்செந்தூர்
திருச்செந்தூர் பகத்சிங் பேருந்து நிலையம் முன்பு பொன்.கல்யாணசுந்த ரம் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பா ட்டத்தில் பன்னீர்செல்வம், ஜெய பாண்டியன், சந்திரசேகர், சிவதாணு தாஸ், அன்பழகன், கண்ணன் உள்ளி ட்டோர் கலந்து கொண்டனர்.