தூத்துக்குடி, ஜூன் 4- கொரோனா நிவாரணம் 7500 வழங்கக் கோரி அனைத்திந்திய மாதர் சங்கம் சார்பில் தூத்துக்குடி புற நகரில் 15இடங்களில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. கோவளத்தில் நடைபெற்ற ஆர்பாட்டத்திற்கு கிளைச் செயலாளர் செல்வி தலைமை வகித்தார். ராஜீவ்நகரில் நடைபெற்ற ஆர்பாட்டத்திற்கு தலைவர் சித்ரா தலைமை வகித்தார். நேசமணி நகரில் நடை பெற்ற ஆர்பாட்டத்திற்கு செயலாளர் பஞ்சவர்ணம் தலைமை வகித்தார். சவேரியார் புரத்தில் தலை வர் சுந்தரியும் தங்கமணி நகரிவ் சுப்புலட்சுமி 4வது தெருவில் நல்லமுத்து, சுபாஷ் நகரில் மாரியம்மாள், சாந்தி நகரில் செல்வி, பாரதிநகரில் பார்வதி, சுந்தர் நகரில் புஷ்பா, தோப்பு தெருவில் கயறு நிஷா, அம்மன் கோவில் தெரு இந்திராணி மற்றும் முத்துப்பேச்சி சண்முகம், இந்திரா ஆகியோர் தலைமை வகித்த னர். மாவட்டச் செயலாளர் பி.பூமயில், புறநகரக் குழு நிர்வாகிகள் அனந்தம்மாள், பொம்முத்தாய், சண் முகத்தாய், வள்ளி, கலா உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டார்கள்.