தூத்துக்குடி, ஜூலை 15- தூத்துக்குடி பஞ்சாயத்து உதவி இயக்குநர்(ஊராட்சி கள்) அலுவலகத்தில் பணி புரியும் பெண் ஊழியரிடம் தகாத முறையில் நடந்து கொண்ட உதவி இயக்குநரை (ஊராட்சிகள்) கண்டித்தும், இதுகுறித்து விசாரணை செய்து உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தி ஊரக வளர்ச்சித்துறை அலுவலர் சங்க தூத்துக்குடி மாவட்ட மையம் திட்ட அலுவலர் அலு வலகத்தின் முன்பு செவ்வா யன்று ஆர்ப்பாட்டம் நடை பெற்றது இதற்கு சோ. மகேந்திர பிரபு சங்க மாவட்ட தலை வர் தலைமை வகித்தார். லா. அன்டோ செயலாளர் கோ ரிக்கை விளக்க உரையாற்றி னார். து.செந்தூர்ராஜன் மாவட்ட தலைவர் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம், தே. முருகன் மாவட்ட செயலாளர் கண்டன உரையாற்றினர். ந.வெங்கடேசன் துணை தலைவர் அரசு ஊழியர் சங்கம் நிறைவுரை ஆற்றி னார். தா.ரா.ராஜேஷ்குமார், மாவட்ட இணைச்செயலா ளர் ஊரக துறை அலுவலர் சங்கம் நன்றி உரையாற்றி னார். தொடர்ந்து தூத்துக்குடி ஆட்சியரிடம் முறையீட்டு மனு வழங்கினர்.