tamilnadu

img

தோழர் சங்கரசுப்பு காலமானார்...

தூத்துக்குடி:
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தூத்துக்குடி முன்னாள் மாவட்டக்குழு உறுப்பினரும், மாவட்டக்குழு அலுவலக செயலாளர் தோழர் சங்கரசுப்பு காலமானார். அவரது உடலுக்கு செங்கொடி போர்த்தப்பட்டு அஞ்சலி செலுத்தப்பட்டது.

சிபிஎம் மாநிலச் செயற்குழு உறுப்பினர் க.கனகராஜ், சிபிஎம் மாவட்டச் செயலாளர் கே.எஸ்.அர்ச்சுனன், நெல்லை மாவட்டச் செயலாளர் கே.ஜி.பாஸ்கரன்,  மாநிலக்குழு உறுப்பினர் மல்லிகா, சிபிஐ முன்னாள் தென்காசி நாடாளுமன்ற உறுப்பினர் அப்பாதுரை, மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் ரசல், கே.சீனிவாசன், கே.பி.ஆறுமுகம், ரவீந்திரன், ஆர்.பேச்சிமுத்து, எஸ்.அப்பாத்துரை, மாநகர் செயலாளர் ராஜா, புறநகர்செயலாளர் ராஜா, ஒன்றிய செயலாளர்கள் சங்கரன், தெய்வேந்திரன், புவிராஜ், நம்பிராஜன், ஆறுமுகம், முத்துகுமார், கருங்குளம் ராமச்சந்திரன், சாலமன், ரவிச்சந்திரன், மாவட்டக்குழு உறுப்பினர்கள் தி.சீனிவாசன், குமாரவேல், சோ.மாரியப்பன், ராஜன், வாலிபர் சங்க மாவட்டச் செயலாளர் முத்து,மாதர் சங்க மாவட்டச் செயலாளர் பூமயில்,மாணவர் சங்க மாவட்டச் செயலாளர் ஜாய்சன் உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர். அஞ்சலி கூட்டம் மாநகர் செயலாளர் ராஜா தலைமையில் நடைபெற்றது. அவரது மறைவுக்கு கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன், மத்தியக்குழு உறுப்பினர்கள் பி.சம்பத், உ.வாசுகி ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.