tamilnadu

கல்லூரி மாணவர் போக்சோ சட்டத்தில் கைது

தூத்துக்குடி, ஜூன் 27- தூத்துக்குடி மாவட்டம், விளாத்தி குளம், ஆற்றங்கரை டேனியல் நகரைச் சேர்ந்தவர் துரைராஜ். இவரது மகன் அன்பு தாசன் (19), அப்பகுதியில் உள்ள கல்லூரி யில் பிஏ மூன்றாம் ஆண்டு படித்து வரு கிறார். இவர் அப்பகுதியைச் சேர்ந்த 16 வயது பெண்ணை காதலித்து வந்துள் ளார். மேலும் திருமண ஆசைகாட்டி அந்த பெண்ணுடன் அவர் நெருங்கிப் பழகிய தில், அந்த பெண் கர்ப்பமானார்.  தற்போது அவர் 8 மாத கர்ப்பிணியாக உள்ளார். இதுகுறித்து விளாத்திகுளம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் அந்த பெண்ணின் தாயார் புகார் அளித் தார். புகாரின் பேரில் ஆய்வாளர் நாக லட்சுமி விசாரணை நடத்தி அன்புதாசனை கைது செய்தார். அவர் மீது போக்சோ சட் டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட் டுள்ளது.