tamilnadu

img

தொழிலாளர் திருத்தச் சட்டத்தை கண்டித்து சிஐடியு ஆர்ப்பாட்டம்

தூத்துக்குடி, மே 14- கொரோனாவிற்கு எதிராக களத்தில் நின்று பணிபுரியும் மருத்து வர்கள், செவிலியர்கள், தூய்மைப் பணியாளர்கள், அங்கன்வாடி பணி யாளர், காவல்துறையினர் ஆகியோர் களுக்கு உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டும். வருமான வரி கட்டாத கூலி தொழிலாளர்களுக்கு மாதம் ரூ. 7500 வீதம் 6 மாதங்களுக்கு நிதியுதவி அளிக்க வேண்டும். அனைத்து குடும்ப அட்டைதாரர் களுக்கும் அடுத்த ஆறு மாதங்களுக்கு இலவசமாக ரேசன் பொருட்கள் வழங்க வேண்டும். தொழிலாளர் பாது காப்பு சட்டத்தை திருத்தி பணிபுரியும் வேலை நேரத்தை 12 மணி நேரமாக மாற்றும் முடிவை கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்திய தொழிற்சங்க மையம் (சிஐடியு) சார்பில் தூத்துக்குடி மாவட் டத்தில் தூத்துக்குடி மாநகர், தூத்துக் குடி புறநகர், கோவில்பட்டி, திருச் செந்தூர் உள்ளிட்ட பகுதிகளில் கண்டன ஆரப்பாட்டம் நடைபெற்றது.

தூத்துக்குடி மாநகரில் நடை பெற்ற ஆரப்பாட்டத்திற்கு சிஐடியு உப்பு தொழிலாளர் சங்க மாவட்டத் தலைவர் பொன்ராஜ் தலைமை வகித்தார். இதில் பொதுத் தொழிலா ளர்கள் சங்க தலைவர் குமாரவேல், செயலாளர் பெருமாள், துணைச் செய லாளர் மணவாளன், உப்பு தொழிலா ளர் சங்க மாவட்டச் செயலாளர் சங்க ரன், சிபிஎம் மாநகரச் செயலாளர் ராஜா, வாலிபர் சங்க மாவட்டச் செய லாளர் எம்.எஸ்.முத்து, வரதன் உட்பட பலர் கலந்து கொண்டனர். கோவில்பட்டியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு சிஐடியு மாவட்ட துணைத் தலைவர் மோகன்தாஸ் தலைமை வகித்தார். சிஐடியு மாநி லக்குழு உறுப்பினர் கிருஷ்ணவேணி, கோவில்பட்டி ஒன்றியச் செயலாளர் தெய்வேந்திரன், முருகன், அந்தோ ணிச் செல்வம், பாலகிருஷ்ணன் உட்பட பலர் கலந்து கொண்டனர். தூத்துக்குடி புறநகரில் நடை பெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு சிஐடியு மாவட்டத் தலைவர் இரா.பேச்சி முத்து தலைமை வகித்தார். சிபிஎம் புறநகர் செயலாளர் பா.ராஜா உள் ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.