தூத்துக்குடி:
தூத்துக்குடி ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி அம்ரேஷ்வர் பிரதாப் சாஹி ஆய்வு செய்தார். நீதிபதி அம்ரேஷ்வர் பிரதாப் சாஹி, மகிளா நீதிமன்றம், குடும்பநல நீதிமன்றம், குற்றவியல் நீதிமன்றம்மற்றும் போக்சோ நீதிமன்றங்களுக்கு சென்று ஆய்வு செய்தார். ஒவ்வொரு நீதிமன்றத்திலும் நீதிபதி அறை,பணியாளர்கள் அறை உள்ளிட்டவற்றை பார்வையிட்டார்.முன்னதாக உயர்நீதிமன்ற நீதிபதிக்கு மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி, முதன்மை மாவட்ட நீதிபதி லோகேஸ்வரன் ஆகியோர் வரவேற்றார். நிகழ்ச்சியில் டிஎஸ்பி கணேஷ், வழக்கறிஞர்கள் செங்குட்டுவன், செல்வகுமார், கிஸ்ஸிங்கர், வாரியார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.