தூத்துக்குடி,ஆக.19- தூத்துக்குடி ஸ்பிக் நகரில் ரோட்டரி சங்கம் மற்றும் அரிமா சங்கம் சார்பில் இரத்த தான முகாம் நடைபெற்றது. தூத்துக்குடி ஸ்பிக் நகர் ரோட்டரி சங்கம் மற்றும் ஸ்பிக் நகர் அரிமா சங்கம் இணைந்து நடத்திய இந்த இரத்த தான முகாமை ஸ்பிக் நிறுவனத்தின் முழு நேர இயக்குநர் இராமகிருஷ்ணன், முதன்மை இயக்க அதிகாரி பாலு ஆகியோர் துவக்கி வைத்தனர். தமிழ்நாடு மாநில இரத்த பரிமாற்று மன்றத்தால் 4 மணி நேரம் நடத்தப்பட்ட முகாமில் ஸ்பிக் நகர் அரிமா மற்றும் ரோட்டரி சங்க உறுப்பினர்கள், ஸ்பிக் நிறுவன தொழிலாளர்கள், டிஎப்எல்நிறுவன தொழிலாளர்கள், பாதுகாப்பு பணியாளர்கள் உட்பட 79 பேர் இரத்த தானம் செய்தனர்.