தூத்துக்குடி, ஜூலை 13- பாரதியார் ஆய்வாளர் இளசை மணியன் திங்களன்று காலை மூச்சுத்திணறல் ஏற்பட்டு திரு நெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனு மதிக்கப்பட்டு காலமானார். தூத்துக்குடி மாவட்டம் எட்டய புரத்தை சேர்ந்தவர் இளசை மணியன் (78). அவரது இயற்பெயர் ராமசுப்பிரமணியன். பாரதி ஆய்வு, இலக்கிய திறனாய்வு, வர லாற்று ஆய்வு, கதை,கவிதை மொழிபெயர்ப்பு, செய்தி விமர்சனம் பாரதி விழா, இலக்கிய விழாக்கள் நடத்துவது, வீதி நாடகங்கள் நடத்துவது போன்ற பணிகளில் ஈடுபாடு கொண்டவர். பாரதி தரிசனம் என இரண்டு பாகங்கள் எழுதி வெளியிட்டுள்ளார். புதுமைப்பித்தனின் கடைசி நாட்கள், புதுமைப்பித்தன் பற்றி ஆர்கே.கண்ணன், ஆர்.நல்ல கண்ணு கட்டுரைகள் இரண்டு தொகுப்பு நூல்கள் என பல நூல்க ளை எழுதியுள்ளார்.பாரதி இலக்கியச் செல்வர், புதுவை அரசின் பாரதி விருது,அறிஞர் விருது, வாழ்நாள் சாதனையாளர் விருது மற்றும் பல்வேறு இலக்கிய மன்றங்களின் சார்பில் விருதுகள் பெற்றுள்ளார். இந்நிலை யில் அவருக்கு திங்களன்று காலை மூச்சுத்திணறல் ஏற் பட்டுள்ளது. தொடர்ந்து அவரை திருநெல்வேலி ஹைகிர வுண்ட் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில்சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி அவர் கால மானார். இளசை மணியன் மறை விற்கு பல்வேறு எழுத்தாளர் கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.