tamilnadu

போக்சோவில் ஒருவர் கைது

தூத்துக்குடி, ஜூன் 23- தூத்துக்குடி மாவட்டம், கடம்பூர் அருகேயுள்ள மேலப்பூ வாணி கிராமத்தைச் சேர்ந்தவர் முருகன் (47). ஆடு மேய்க்கும் தொழிலாளியான இவர், 9 வயது சிறுமியிடம் அத்து மீறி நடந்து சில்மிஷம் செய்துள்ளார். இதுகுறித்து அச்சிறுமி யின் உறவினர் ஒருவர் கடம்பூர் அனைத்து மகளிர் காவல் நிலை யத்தில் செய்த புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் மாரியம்மாள்  விசாரணை நடத்தி, முருகனை கைது செய்தார். அவர் மீது  போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.