tamilnadu

மேலும் ஒரு சிபிஐ அதிகாரிக்கு கொரோனா தொற்று

தூத்துக்குடி, ஜூலை 26- சாத்தான்குளம் காவல்துறையினரால் தாக்கப்பட்டு வியாபாரிகளான ஜெயராஜ், அவரது மகன் பென்னிக்ஸ் ஆகியோர் உயிரிழந்த வழக்கை சி.பி.ஐ. ஏ.டி.எஸ்.பி. விஜயகுமார் சுக்லா தலைமையில் சச்சின், அனு ராக்சிங், பவன்குமார்திவேதி, சைலேஷ்குமார், சுஷில்குமார்வர்மா, அஜய்குமார், பூனம்குமார் ஆகிய 8 பேர் கொண்ட அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.  இந்த வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் இருக்கும் 10 போலீ சாரையும் சி.பி.ஐ. அதிகாரிகள் காவலில் எடுத்து மதுரை ஆத்திக்குளத்தில் உள்ள அலுவலகத்தில் வைத்து விசாரணை நடத்தினர். சாத்தான்குளம் அழைத்துச் சென்றும் விசாரித்தனர். இதற்கிடையே காவலில் எடுத்து விசாரிக்கப்பட்ட போலீசாருக்கும், அவர்களிடம் விசாரணை நடத்திய சி.பி.ஐ. அதிகாரிகளுக்கும் கொரோனா பரிசோதனை செய்ததில், சி.பி.ஐ. விசாரணை குழுவில் உள்ள உதவி ஆய்வாளர் சச்சின் உள்பட 2 பேருக்கு தொற்று இருந்தது உறுதியானது.

 இதை தொடர்ந்து, சாத்தான்குளம் வழக்கில் கைதான போலீசா ருக்கும், சி.பி.ஐ. அதிகாரிகள் மற்ற 6 பேருக்கும் மீண்டும் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதன் முடிவுகளில் சி.பி.ஐ. குழுவில் இடம் பெற்றி ருந்த பவன்குமார் திவேதி, அஜய்குமார் ஆகியோருக்கு தொற்று இருப்பது தெரியவந்தது. பின்னர் அவர்களும் மதுரை ரெயில்வே மருத்துவமனை யில் அனுமதிக்கப்பட்டனர்.  மேலும் சாத்தான்குளம் வழக்கில் 9-வது குற்றவாளியாக சேர்க்கப் பட்டுள்ள சிறப்பு உதவி ஆய்வாளர் பால்துரைக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டது. அதை தொடர்ந்து அவரை சிறை நிர்வாகம் தனிமைப்படுத்தி, மதுரை அரசு இராஜாஜி மருத்துவமனையில் அனுமதித்தனர். இந்நிலை யில் மேலும் ஒரு சிபிஐ அதிகாரிக்கு தொற்று உறுதியாகியுள்ளது. ஏற்க னவே 4 சிபிஐ அதிகாரிகளுக்கு தொற்று ஏற்பட்ட நிலையில் மேலும் ஒரு வருக்கு பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

;