தூத்துக்குடி, மே 21- வெளி மாநில தொழிலாளர்களை சொந்த ஊருக்கு அனுப்ப இந்த வாரம் 3 ரயில்கள் செல்கிறது என தூத்துக்குடி மாவட்ட ஆட்சி யர் சந்தீப்நந்தூரி தெரிவித்தார். தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி வியாழனன்று செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது: தூத்துக்குடி மாவட்டத்தில் நேற்று வரை 113 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்ட றியப்பட்டுள்ளது. இதில் இறந்தவர்கள் 2 பேர். 34 பேர் டிஸ்சார்ஜ் ஆகியுள்ளனர். தற்போது 77 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. தற்போது மகா ராஷ்டிரா, குஜராத் போன்ற வெளி மாநி லங்களிலிருந்து வருபவர்களை தனிமைப் படுத்தி தீவிரமாக கண்காணித்து வரு கிறோம். அவர்களால் பாதிப்பு அதிகமாக உள்ளது. சென்னையிலிருந்தும் அதிக மானோர் தூத்துக்குடி வந்துள்ளனர்.
மாவட்டத்தில் 15 செக்போஸ்ட்கள் அமைக் கப்பட்டு அங்கு வருபவர்கள் தீவிர சோத னைக்கு பிறகே அனுமதிக்கப்படுகின்றனர். மகாராஷ்டிராவிலிருந்து வந்தவர்களால் அதிகமான பாதிப்பு உள்ளது. மாவட்டத்தில் 13 தனிமைப்படுத்தபட்ட பகுதிகள் உள்ளன. இங்கு தினசரி கிருமி நாசினி தெளிப்பு, வீடு வீடாக சோதனை நடைபெற்றது. 1494 பேர் பிற மாநிலங்களி லிருந்து தூத்துக்குடி வந்துள்ளனர். இன்னும் வந்து கொண்டேயிருக்கின்றனர். இதுவரை 1919 வெளி மாநில தொழிலா ளர்கள் அவரவர் மாநிலங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். பஞ்சாப், ஹரி யானா மாநிலங்களை சேர்ந்த தொழிலா ளர்களை அனுப்பி வைக்கும் பணி நடை பெற்று வருகிறது. இந்த வாரத்தில் மட்டும் அவர்களை அனுப்ப 3 ரயில்கள் செல்கி றது. தமிழகஅரசு உத்தரவுப்படி ஊர டங்கு தளர்வு தூத்துக்குடி மாவட்டத்தில் அமல்படுத்தப்பட்டுள்ளது.
அரசு அலு வலகங்கள், தனியார் தொழிற்சாலைகள் இயங்கி வருகிறது. கட்டுமான பணிகள், சாலை பணிகள், குடி மராமத்து பணிகள் இந்த வாரத்தில் தொடங்கும். கொழும்பு விலிருந்து தூத்துக்குடிக்கு கப்பல் வரு வதற்கான முழு விபரங்கள் இன்னும் வர வில்லை. வந்த பின்னர் அது குறித்து உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும். தூத்துக் குடி துப்பாக்கி சூடு நினைவு தினம் நாளை அனுசரிக்கப்பட உள்ளது. ஏற்கனவே ஊர டங்கு அமலில் உள்ளதால் யாரும் பொது இடங்களில் கூட அனுமதி இல்லை. மாவட் டம் முழுவதும் ஆயிரம் போலீசார் பாது காப்பில் ஈடுபடுவார்கள். பொதுமக்கள் இதற்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.