தூத்துக்குடி, ஜூன் 8- தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் கொரோனா வார்டில் குணமடைந்த 19 பேர் திங்களன்று வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். தூத்துக்குடி மாவட்டத்தில் இதுவரை 329 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப் பட்ட நிலையில், இருவர் சிகிச்சை பல னின்றி உயிரிழந்தனர். 200 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பி உள்ளனர். தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை யில் 126 பேரும், திருநெல்வேலி அரசு மருத்து வக் கல்லூரி மருத்துவமனையில் ஒருவரும் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில், தூத்துக்குடி அரசு மருத்துவமனை கொ ரோனா வார்டில் சிகிச்சை பெற்று வந்த 19 பேர் குணமடைந்து வீடு திரும்பினர்.