தூத்துக்குடி, மே 26- தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் 130 பேர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருகின்ற னர். தூத்துக்குடி மாவட்டத்தில் திங்களன்று மராட்டிய மாநி லத்தில் இருந்து வந்து, தனிமைப்படுத்தப்பட்ட முகாம்களில் இருந்த 14 பேருக்கும், குஜராத்தில் இருந்து வந்த 2 பேருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதேபோன்று கோவில்பட்டி அருகே உள்ள புங்கவர்நத்தம் பகுதியை சேர்ந்த ஒருவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால் தூத்துக்குடி மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட வர்களின் எண்ணிக்கை 178 ஆக உயர்ந்து உள்ளது. தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் செவ்வாயன்று காலை 8 மணி நிலவரப்படி 130 பேர் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனிடையே தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் கொரோனா வார்டில் சிகிச்சை பெற்று வந்த 8 பேர் குணமடைந்து திங்களன்று வீடு திரும்பி னர். தூத்துக்குடி மாவட்டத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு, குணமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 54 ஆக அதிகரித்து உள்ளது.