இந்தியாவில் கடந்த 40 ஆண்டுகளில் இல்லாத அளவில் நுகர்வோரின் வாங்கும் சக்தி குறைந்துள்ளது.
இந்தியாவில் வீட்டு நுகர்வோர் செலவு என்ற தலைப்பில் தேசிய புள்ளி விபர அலுவலகம் ஆய்வு ஒன்றை நடத்தியது.அதில் கடந்த 2011-12 ஆம் ஆண்டில் ஒரு மாதத்தில் தனிநபர் செலவழித்த செலவு 1501 ஆக இருந்தது. ஆனால் 2017 -18 ம் ஆண்டி தனிநபர் செலவு ரூ14446 ஆக இருந்தது. இது 2011-12ஐ ஒப்பிடுகையில் 3.7 சதவிகிதம் குறைந்துள்ளது. மேலும் உணவுக்கு செலவிடும் தொகையும் குறைந்துள்ளது. இதனால் ஊட்டச்சத்து குறைவு உள்ளிட்ட பிரச்சனைகள் எழக்கூடும் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.
கிராமங்களில் கடந்த 2011-12 ல் உணவிற்கான தனிநபர் செலவு ரூ.643 ஆக இருந்தது. ஆனால் 2017-18 ல் ரூ580 ஆக உயர்ந்துள்ளது. 2011-12ஐ ஒப்பிடுகையில் 10 சதவிகிதம் குறைந்துள்ளது. இதில் நகர்ப்புறத்தில் பெரிய மாற்றம் இல்லை. 2011-12ல் மாதம் நபரின் உணவுக்கான செலவு ரூ943 ஆக இருந்தது. 2017 - 18 ல் ரூ 946 ஆக உள்ளது. இது தொடர்பாக பிஸ்னஸ் ஸ்டேன்டர்டு செய்தி வெளியிட்டுள்ளது. இதற்கிடையில் 2011-12 மற்றும் 2017-18ம் ஆண்டிற்கும் இடையில் விலைவாசி பலமடங்கு உயர்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த ஆய்வு ஜூலை 2017முதல் ஜூன் 2018வரை நடத்தப்பட்டது இந்த அறிக்கை 2019 ஜூன் 19ல்ம் தேதி வெளியிட அக்குழு அனுமதி வழங்கியது. ஆனால் பாதகமான சூழல் வெளியாகும் என்பதால் அறிக்கை வெளியிடப்படவில்லை என்று கூறப்படுகிறது.