tamilnadu

img

டிக்கெட் கேன்வாசர்களுக்கு போக்குவரத்து தொழிலாளர் சங்கம்  நிதிஉதவி  

திருவில்லிபுத்தூர்
தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக திருவில்லிபுத்தூர் கிளையில் தினக் கூலிகளாக டிக்கெட் கேன்வாசர்கள்,பஸ் பாடி கிளீனர்கள் ,துப்புரவு பணியாளர்கள் என மொத்தம் எட்டு பேர் பணியாற்றுகின்றனர். இவர்கள் அனைவரும் தினக் கூலிகள்.  தற்போது ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளதால் பேருந்துகள் இயங்கவில்லை. இந்நிலையில் இவர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாக உள்ளது. இந்த தொழிலாளர்களுக்கு  தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக  தொழிலாளர் சங்கம் (சிஐடியு ) சார்பில் நபருக்கு 2000 ரூபாய் வீதம் நிதியுதவி வழங்கப்பட்டது .

இந்நிகழ்ச்சிக்கு சிஐடியு கிளை செயலர் முனீஸ்வரன் தலைமை தாங்கினார்.  போக்குவரத்து  தொழிலாளர் சங்க (சிஐடியு ) செயலாளர் வெள்ளத்துரை நிதியை வழங்கினார். கிளை தலைவர் ராஜா ,பொருளாளர் கண்ணன் ,ஓய்வுபெற்ற தொழிலாளர் சங்கத்தின் சார்பில் கிருஷ்ணமூர்த்தி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

;