tamilnadu

img

மழைவாழ் மக்களுக்கு அத்தியாவசிய பொருள்கள்... விருதுநகர் ஆட்சியர் வழங்கினார்

திருவில்லிபுத்தூர்:
விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் உள்ள அய்யனார் கோவில் பகுதியில் 30க்கும் மேற்பட்ட மலைவாழ் குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு கொரோனா நிவாரணமாக அரிசி, பருப்பு, சமையல் எண்ணெய் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை ராம்கோ நிறுவனத்துடன் இணைந்து மாவட்ட ஆட்சியர் கண்ணன் அவர்கள் வழங்கினார். மேலும் மழை வாழ் மக்களுக்கு தமிழக அரசின் உதவித்தொகை ரூ.1000 வழங்கினார்.

பின் செய்தியாளர் சந்திப்பின் போது, இராஜபாளையத்தில் கொரோனா பாதிப்பு குறைந்து வருகிறது. விருதுநகர் மாவட்டம் விரைவில்  நோய் தொற்றிலிருந்து முன்னேற்றம் அடைந்து பச்சை குறியீடினை பெறும். மாவட்டத்தில் சமூக பரவல் தற்போது வரை இல்லை. மேலும் கடந்த 24 ம் தேதி  இராஜபாளையத்தில் அனுமதி இன்றி அதிகமான மக்களை திரட்டிய தொழில் அதிபர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார். பின்னர் வத்ராயிருப்பு வட்டம் தாணிப்பாறையில் வசிக்கக்கூடிய மலைவாழ் மக்களுக்கு அரிசி மற்றும் பலசரக்கு ரூ.1000 உள்ளிட்டவற்றை 64 பேருக்கு மாவட்ட ஆட்சியர் வழங்கினார்.
 

;