tamilnadu

img

வெவ்வேறு சாலை விபத்துகளில் 2 பேர் பலி....

அரசு பேருந்து மோதி வாலிபர் பலி 

திருவில்லிபுத்தூர்:

திருவில்லிபுத்தூர் அருகே உள்ள மம்சாபுரம் பகுதியை சேர்ந்தவர் தங்கமணி வயது 39 இவர் தனியார்பெட்ரோல் பங்க் ஒன்றில் மேலாளராக பணிபுரிந்து வருகிறார்.

இந்நிலையில் தங்கமணிஞாயிறன்று கிருஷ்ணன் கோயிலில் இருந்து திருவில்லிபுத்தூரு க்கு பைக்கில்வந்து கொண்டிருந்தார். கடலை பண்ணை என்ற இடத்தின் அருகே வரும் போது அந்த வழியாக வந்தஅரசு பேருந்து அவர் மீது மோதியது. இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே தங்கமணி பலியானார்.அரசுப் பேருந்து டிரைவர்வைரமுத்து மீது கிருஷ்ணன் கோயில் போலீசார் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.

                                ****************

ஒருவர் பலி

நத்தம் 
திண்டுக்கல் மாவட்டம் சாணார்பட்டி அருகே அஞ்சுகுழிபட்டியை சேர்ந்த கூலிதொழிலாளியான கண்ணன்(38) , தனது இருசக்கர வாகனத்தில் திண்டுக்கலில் இருந்து சொந்த ஊருக்கு திரும்பி கொண்டிருந்தார். அப்போது கொசவபட்டி ஆரம்ப சுகாதார நிலையம் முன் வந்த போது எதிரே வந்த ஆம்னி வேன் மீதுமோதியதில் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக உயிழந்தார். இதுகுறித்து  சாணார் பட்டி சப்-இன்ஸ்பெக்டர் ஜவஹர் வழக்கு பதிவு செய்துவிசாரணை நடத்தி வருகிறார்.