திருத்துறைப்பூண்டி, மே 7- மதுக்கடையை திறக்காதே என்ற கோரிக் கையை வலியுறுத்தி கருப்பு பட்டை அணிந்து திருத்துறைப்பூண்டி தியாகி.சிவராமன் நினை வகத்தில் போராட்டம் நடைபெற்றது. மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக் குழு உறுப்பினர் ஐ.வி. நாகராஜன் தலைமை வகித்தார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் சி. ஜோதிபாசு, மாவட்ட குழு உறுப்பினர்கள் டி. சுப்பிரமணியன், எம்.பி.கே.பாண்டியன், எஸ். சாமிநாதன், கே.பி.ஜோதிபாசு, நகர செயலா ளர் கே.ஜி.ரகுராமன், ஒன்றிய செயலாளர் டி.வி.காரல்மார்க்ஸ், ஒன்றிய கவுன்சிலர் கு.வேதரத்தினம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இதே போல் கோட்டூர் ஒன்றியம் இருள் நீக்கியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் ஒன்றிய செயலாளர் எல்.சண்முகவேல் தலைமை வகித்தார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஆர்.குமாரராஜா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். முத்துப்பேட்டை ஒன்றியம் கள்ளிக்குடி கிளை சார்பில் ஒன்றிய குழு உறுப்பினர் கே.எம். எஸ்.தேவகி தலைமையில் மாவட்ட குழு உறுப்பினர் கே.வி.ராஜேந்திரன் முன்னி லையில் மதுக்கடைக்கு எதிரான போராட்டம் நடைபெற்றது.
திருத்துறைப்பூண்டி
திருத்துறைப்பூண்டி ஒன்றியத்தில் புதிய பேருந்து நிலையத்தில் கண்டன ஆர்ப்பாட் டம் நடைபெற்றது. திமுக சட்டமன்ற உறுப்பி னர் ப.ஆடலரசன், உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
கும்பகோணம்
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் டாஸ்மாக் கடையை மூட வலியுறுத்தி தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதூர், கும்பகோணம் தாலுகாவில் கட்சி உறுப்பினர்கள் வீட்டின் முன்பாக குடும்பத்துடன் தனிநபர் இடைவெளி யுடன் ஆர்ப்பாட்டம் நடத்தினர். கட்சியின் திருவிடைமருதூர் அலுவல கத்தில் திருவிடைமருதூர் வடக்கு ஒன்றிய செய லாளர் ஜீவபாரதி தலைமையில் மாவட்ட குழு உறுப்பினர் பக்கிரிசாமி, நாகேந்திரன், சேகர், ஒன்றிய குழு உறுப்பினர் வாசுதேவன், சொக்க லிங்கம், கோவிந்தராஜன் மற்றும் கும்ப கோணம் தாலுகா பாபுராஜபுரம் பகுதியில் குடந்தை ஒன்றிய செயலாளர் பி.ஜேசுதாஸ் தலைமையில் கட்சி உறுப்பினர்களும், புளி யம்பாடி கிராமத்தில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் சின்னை. பாண்டியன், குடந்தை நகர செயலாளர் செந்தில்குமார், திருவிடை மருதூர் தெற்கு ஒன்றிய செயலாளர் பழனி வேல் தலைமையில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் அருளரசன் ஒன்றிய குழு உறுப்பி னர்கள் ஆறுமுகம், தருமையன் உள்ளிட்ட கிளை செயலாளர்கள் திருவிடைமருதூர், கும்பகோணம் உட்பட 20-க்கும் மேற்பட்ட இடங்களில் டாஸ்மாக் கடையை திறக்காதே, ஊரடங்கால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்கு என்ற பதாகைகளுடன் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.