tamilnadu

img

உன்னாவ் பாலியல் வன்கொடுமைக்கு நீதி கேட்டு ஆர்ப்பாட்டம்

திருவாரூர், ஆக.6- உத்தரபிரதேச மாநிலம் உன்னாவ் பகுதியில் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட சிறுமிக்கு உரிய நீதி வழங்கிடக் கோரியும் குற்றவாளிகள் அனைவரையும் கைது செய்யக் கோரி திருவாரூரில் திங்கட்கிழமை மாலை அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. பழைய பேருந்து நிலையம் அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்டத் தலைவர் த.சுமதி தலைமை யேற்றார். மாநில துணைத்தலைவர் ஜி.கலைச்செல்வி, மாவட்ட செய லாளர் பா.கோமதி, பொருளாளர் எஸ். பவானி உரையாற்றினர். சங்க நிர்வாகி கள் சுலோச்சனா, காமாட்சி, சந்திரா உட்பட திரளானோர் கலந்து கொண்ட னர்.  மேலும் திருவாரூர் மருதம்பட்டி னத்தில் குடும்ப வன்முறையால் தற்கொலை செய்து கொண்டு மறைந்த பெண்ணின் குடும்பத்திற்கு நீதி வழங்கிடவும், அவரது மரணத்திற்கு காரணமான அனைவரையும் கைது செய்திடவும் இந்த ஆர்ப்பாட்டத்தின் போது வலியுறுத்தப்பட்டது.