திருவாரூர், ஜூலை 08- ஆசியாவில் மிகப்பெரிய கலை அழகுமிக்க ஆழித்தே ரோட்டம் திருவாரூரில் ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் - மே மாதத்தில் நடைபெறுவது வழக்கம். ஆனால் இந்த ஆண்டு கொரோனா வை ரஸ் நோய்த்தொற்று பரவல் காரணமாக ஆழித்தே ரோட்டம் நடைபெறவில்லை. இதன் காரணமாக திருவாரூர் மற்றும் உலகமெங்கும் இருக்கக்கூடிய ஆழித்தே ரோட்ட பக்தர்களின் வேண்டு கோளுக்கு இணங்க தே ரோட்ட காட்சிகளை உள்ள டக்கிய “நம்ம ஊரு திரு விழா” என்ற பெயரில் பாடல் வெளியிடப்பட்டது. திருவாரூரில் உள்ள சிவா மீடியா நிறுவனர் என்.சிவ ராஜ் இயக்கத்தில் சென்னை ரமேஷ் பாரதி பாடல் இயற்ற, திரை இசையமைப்பாளர் விஜய்பிரபு இசையில் உருவான பாடல் வெளியீட்டு நிகழ்ச்சி திருவாரூரில் நடைபெற்றது. தமிழ்நாடு பத்திரிகையாளர்களின் சங்க டெல்டா மாவட்ட ஆலோ சகர் எஸ்.நவமணி வெளியிட, மாவட்டத் தலைவர் எஸ். நாகராஜன் பெற்றுக் கொ ண்டார். மாவட்ட பொருளா ளர் ஜி.ரவிச்சந்திரன் உள்ளி ட்டோர் கலந்து கொண்டனர். பின்னர் இப்பாடல் முகநூல், யூடியூப், வாட்சப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் ஒளிபரப்பானது.