திருவாரூர்,டிச.1- திருவாரூர் அருகே நீலகுடி கிராமத்தில் அமைந்துள்ள தமிழ்நாடு மத்தியப் பல்கலைக்கழகத்தில் ஓசூரை சேர்ந்த முரளி என்பவரது மகள் மைதிலி (19) பிஎஸ்சி இரண்டாம் ஆண்டு படித்து வந்தார். இவர் விடுதியில் தங்கியிருந்து படித்து வந்துள்ளார். இந்நிலையில் சனிக்கிழமையன்று இரவு யாருமில்லாத நேரத்தில் மைதிலி விடுதி அறையில் உள்ள மின்விசிறியில் தூக்கு போட்டு தற்கொலை செய்துள்ளார். தகவல் அறிந்து வந்த நன்னிலம் போலீசார் ,மைதிலியின் உடலை மீட்டு திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவ மனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மாணவிகள் தொடர்ந்து பலியாவது அதிர்ச்சியையும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.