tamilnadu

திருவாரூர், மயிலாடுதுறை, தஞ்சாவூர் முக்கிய செய்திகள்

நாளை மின்தடை

மன்னார்குடி, ஆக.16-  மன்னார்குடி 110 கிவோ துணை மின் நிலையத்தில் மின் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் செ வ்வாய்க்கிழமை (ஆக.18) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மன்னார்குடி நக ரம், அசேஷம், சுந்தர க்கோட்டை, மேலவாசல், நெடுவாக்கோட்டை, செரு மங்கலம், பருத்தி க்கோட்டை, மூவாநல்லூர், காணூர், நாவல்பூண்டி, கோ ரையாறு, கர்ணாவூர், கூத்தா நல்லூர், வடபாதிமங்கலம் ஆகிய பகுதிகளுக்கு மின் விநியோகம் இருக்காது என மின் வாரிய மன்னார்குடி உதவி செயற்பொறியாளர் அலுவலக செய்திக் குறிப்பு தெரிவித்துள்ளது.


ரத்த தான முகாம்

சீர்காழி, ஆக.16-  மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அரசு மருத்துவமனையில் அவசர ரத்த நன்கொடையாளர்கள் மையம், அரசு ரத்த வங்கி மற்றும் சிகரம் சமூக நலச் சங்கம் சார்பில் ரத்ததான முகாம் நடைபெற்றது. முகா மை சீர்காழி அரசு தலைமை மருத்துவர் பானுமதி துவக்கி வைத்தார். முகா மில் இளைஞர்கள் 20 யூனிட் ரத்தம் வழங்கினர்.


உறுதிமொழி ஏற்பு

தஞ்சாவூர், ஆக.16-  இந்திய திருநாட்டின் 74- வது சுதந்திர தினத்தை யொட்டி, அரசமைப்புச் சட்டம், கூட்டாட்சி கோட்பாடு, ஜனநாயகம், மதச்சார்பி ன்மையை பாதுகாத்திடவும், மக்கள் ஒற்றுமையை பேணிக் காத்திடவும், இடது சாரிக் கட்சிகள் சார்பில் உறு திமொழி ஏற்கும் நிகழ்ச்சி சனிக்கிழமை  தஞ்சாவூர் ரயி லடியில் நடைபெற்றது.  நிகழ்ச்சிக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டச் செயலாளர் கோ.நீலமேகம், இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகக்குழு உறுப்பினர் சி.சந்திரகுமார், சிபி(எம்.எல்) ராஜன் ஆகியோர் தலை மை வகித்தனர். சிபிஎம் மாவ ட்டச் செயற்குழு உறுப்பி னர்கள், மாவட்டக்குழு உறு ப்பினர்கள் கலந்து கொண்டனர்.


முறைசாரா  தொழிலாளருக்கு  நிவாரணம் 

அறந்தாங்கி, ஆக.16-  புதுக்கோட்டை மாவ ட்டம் அறந்தாங்கி தாலுகா சுப்ரமணியபுரத்தில் முறை சாரா தொழிலாளர்களுக்கு, தஞ்சை கோட்ட காப்பீட்டு கழக ஊழியர் சங்க துணை தலைவர் கண்ணம்மா முயற்சியில் திருச்சி காட்டூர் அரசு நடுநிலைப்பள்ளியில் பணியாற்றி ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் ஜான்சி ராணி கிளமண்ட் சார்பாக, ரூ.10 ஆயிரம் மதிப்புள்ள மளிகை பொருட்களை சிபிஎம் தாலுகா செயலாளர் தென்றல் கருப்பையா தலைமையில், சிபிஎம் மாவட்டச் செயலாளர் எஸ்.கவிவர்மன் 20, முறைசாரா தொழிலாளர்களுக்கு வழங்கினார். இதில் சிபிஎம் தாலுகா குழு உறுப்பினர் சரோஜா மற்றும் மாணிக்கம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.


 

;