குடவாசல் அருகே செருகளத்தூர் - சித்தாடி மற்றும் சாலியமங்கலம் - பருத்தியூர் கிராமங்களை இணைக்கும் வகையில் புத்தாற்றின் குறுக்கே புதிய இணைப்பு பாலங்கள் கட்டப்பட்டன. இதை கூடுதல் மாவட்ட ஆட்சியர் ஏ.கே.கிஷோர்குமார் தலைமையில், நன்னிலம் தொகுதி சட்டமன்ற உறுப்பினரும், உணவுத்துறை அமைச்சருமான ஆர்.காமராஜ் பாலங்களை திறந்து வைத்தார்.