tamilnadu

img

தீக்கதிர் செய்தி எதிரொலி விறுவிறுப்படையும் பருத்தி கொள்முதல்

திருவாரூர், ஜூலை 6- திருவாரூர் மாவட்ட பரு த்தி விவசாயிகளின் இன்ன ல்கள் குறித்தும், கொள்முத லில் நிலவிய தேக்கம்  குறித்தும் திங்கட்கிழ மையன்று தீக்கதிர் நாளி தழில் விரிவான செய்தி வெளி யாகியிருந்தது. காலத்தில் வெளியான இந்த செய்தியால் பருத்தி விவசாயிகளின் சிரமங்கள் குறைவதற்கு வழி ஏற்பட்டுள்ளது. இதனால் பருத்தி விவசாயிகளும் சற்று ஆறுதல் அடைந்துள்ளனர். ஞாயிற்றுக்கிழமை ஒழு ங்குமுறை விற்பனைக்கூட செயலாளர் தீக்கதிர் செய்தி யாளரிடம் கூறியபடி, நூற்று க்கணக்கான வாகனங்களில் காத்திருந்த பருத்தி விவ சாயிகளிடம் பருத்தி மூட்டை கள் வாங்கப்பட்டு வளா கத்தில் மூட்டைகளுக்கு எண்கள் இடப்பட்டு பாது காப்பாக அடுக்கி வைக்கப்ப ட்டுள்ளன.  தமிழகம் முழுவதும் முழு முடக்கம் அறிவிக்கப்பட்ட ஞாயிற்றுக்கிழமை விவசாயி கள் பெருமளவில் குவிந்தது அச்சத்தை ஏற்படுத்தியதுடன் பாதுகாப்பற்ற நிலையில் நூற்றுக்கணக்கான பருத்தி  மூட்டைகள் திறந்த வெளியில் அடுக்கி வைக்கப்பட்டு ள்ளது. தற்போதைய மழை  பெய்யும் சூழலில் பாழாகிவி டுமோ என்ற கவலையையும் விவசாயிகளுக்கு ஏற்பட்டு ள்ளது. குடிநீர், தங்கும் வசதி போன்ற அடிப்படை வசதி கள் இல்லாததும் பெரும் குறையாக உள்ளது. செவ்வா ய்க்கிழமை (ஜூலை 7) பரு த்தி ஏலம் நடைபெறவுள்ள நிலையில் சம்பந்தப்பட்ட வேளாண்மைத்துறை அதிகாரிகள், விவசாயி களுக்கான வசதிகளை செய்து தர வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. விடுபட்ட விவசாயிகளி டம் வரும் சனிக்கிழமை தொ டங்கி தொடர்ந்து கொள்மு தல் பணிகள் நடைபெறும் என நிர்வாகம் கூறியுள்ளது. வரும் ஆண்டுகளில் முன்னெ ச்சரிக்கையுடன் அனைத்து நடவடிக்கைகளும் எடுக்க ப்பட வேண்டும் என பருத்தி  விவசாயிகள் கோரியுள்ளனர்.