திருவாரூர், ஆக.8- தமிழ்நாடு மாநில வாணிப கழகம் (டாஸ்மாக்) சார்பில் நடத்தப்படும் மதுபான கடைகளில் பணியாற்றும் மேலாளர், விற்பனையாளர் உள்ளிட்ட ஊழியர்கள் சிஐடியு தலைமையில் திருவாரூரில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபாட்டு மாவட்ட மேலாளரி டம் மனு அளித்தனர். பணி நிரந்தரம் செய்ய வேண்டும், காலமுறை ஊதியம் வழங்க வேண்டும், பணியின் போது கொரோனா பாதிப்பால் உயிரிழந்த ஊழியர்களின் குடும்பங்களுக்கு அரசு அறி வித்த 50 லட்ச ரூபாய் வழங்க வேண்டும். அவர்தம் வாரிசுக ளுக்கு கல்வித்தகுதி அடிப்படையில் அரசு பணி வழங்க வேண்டும். பாதுகாப்பு உபகரணங்களை வழங்க வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. இதில் சங்க மாவட்டத் தலைவர் பி.பாப்பையன், செய லாளர் பி.என்.லெனின், பொருளாளர் என்.அசோக்ராஜ் மற்றும் மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.