திருவாரூர் ஜூலை 25- மத்திய அரசு அறி முகப்படுத்தியுள்ள தேசிய வரைவு புதிய கல்விக் கொள்கைக்கு எதிராக தமிழகம் முழுவதும் மக்கள் மத்தி யில் ஒரு கோடி கையெழுத்து பெற்று தெருமுனைக் கூட்டங்கள் நடத்தும் இயக்கம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் தொடங்கியுள்ளது. இத னையொட்டி திருவாரூர் மாவ ட்டத்திலும் வியாழக்கிழமை மக்கள் சந்திப்பு கையெழுத்து இய க்கம் தொடங்கியது. திருவாரூர் நகராட்சி பகுதிக ளில் வணிகர்கள் மற்றும் பொது மக்கள் மத்தியில் கையெழுத்து இயக்கத்தை சிபிஎம் மாநிலக்குழு உறுப்பினர் ஐ.வி.நாகராஜன் தொடங்கினார். மாவட்ட செயலாளர் ஜி.சுந்தரமூர்த்தி தலைமையில் நடைபெற்ற இந்த இயக்கத்தில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஜி.பழனிவேல், மாவட்டக்குழு உறுப்பினர் பி.ஆர்.சாமியப்பன், ஒன்றிய செயலாளர் இடும்பையன், நகர செயலாளர் எம்.பாலசுப்ரமணியன், ஒன்றியக்குழு உறுப்பினர்கள் ஜெயபால், சேகர், மாதர் சங்க மூத்த தலைவர் டி.ஜி. கலைச்செல்வி(நாகை), மாவட்ட க்குழு உறுப்பினர் அம்சம், வாலிபர் சங்க நிர்வாகி சத்தியசீலன் உள்ளி ட்டோர் கலந்து கொண்டனர். வணி கர்கள், பொதுமக்கள் ஆர்வமுடன் கையெழுத்திட்டு தங்கள் ஆத ரவைத் தெரிவித்தனர். மாவட்டக்குழு ஏழைகளுக்கு எட்டாக்கனியாக இருந்த கல்வியை அனைவருக்கும் பரவலாக்கிய சூழலில் தற்போது கல்வியை முழுக்க முழுக்க வணி கமயமாக்கும் நோக்கோடு ஏழை எளி யோருக்கான கல்வியை தட்டி பறிக்கும் வேலையில் மோடி அரசு ஈடுபட்டு வருகிறது. இதன் வெளிப்பாடு தான் தேசிய வரைவு புதிய கல்விக் கொள்கையை அறிமு கப்படுத்தியுள்ளது. இதற்கு எதிராக நாடு முழு வதும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கிளர்ச்சியில் ஈடுபட்டுள்ள சூழ லில் திருவாரூர் மாவட்டத்தில் இந்த இயக்கத்தை வெற்றிகரமாக நடத்து வதற்காக கட்சியின் மாவட்டக்குழு கூட்டம் திருவாரூரில் தோழர்.பி.ராமமூர்த்தி நினைவகத்தில் ஐ.வி. நாகராஜன் தலைமையில் நடை பெற்றது. மாநிலக்குழு உறுப்பினர் வி.மாரிமுத்து, மாவட்ட செயலாளர் ஜி.சுந்தரமூர்த்தி மற்றும் முன்னணி நிர்வாகிகள், உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில் புதிய கல்விக் கொள்கைக்கு எதிராக மக்களிடம் 3 லட்சம் கையெழுத்துக்கள் பெற்றி டவும், 50 தெருமுனைக் கூட்ட ங்கள் நடத்துவது எனவும் முடிவு எடுக்கப்பட்டது. இதன் அடிப்படை யில் மாவட்டம் முழுவதும் இப்பணி முழு மூச்சில் நடைபெற்று வருகி றது. மக்கள் நலனிற்கு எதிராகவே செயல்படுவதையே வழக்கமாகக் கொண்டு வளர்ச்சி என்ற பெயரில் மக்களுக்கு எதிரான திட்டங்களை அமல்படுத்துவதில் மோடி அரசு தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது.