திருத்துறைப்பூண்டி ஆட்டூர் சாலையில் தெரு நல சங்கம், பசுமை இயக்கம் மற்றும் பத்திரிகையாளர் சங்கம் சார்பில் மரக்கன்று நடும் விழா நடைபெற்றது. நகராட்சி நகரமைப்பு ஆய்வாளர் அருள் விழாவை துவக்கி வைத்தார். பசுமை இயக்கம் ஐயப்பன், பத்திரிகையாளர் சங்கத் தலைவர் தேவா, செயலாளர் வேலவன், பொருளாளர் பிரபாகரன், சூரிய மோகன், தெரு நல சங்க நிர்வாகிகள் மோகன், சேகர், வீரபத்திரன் டாக்டர் சகாயம் உடனிருந்தனர்.