tamilnadu

img

இரண்டே ஊழியர்களைக் கொண்டு ஸ்டேட் வங்கியை நடத்துவதா? முத்துப்பேட்டையில் ஓய்வூதியர்கள் போராட்டம்

முத்துப்பேட்டை, செப்.19- முத்துப்பேட்டை ஸ்டேட் வங்கியில் இரண்டே இரண்டு ஊழியர்கள் தான் பணியாற்றுகிறார்கள். ஐந்து ஊழியர்கள் பணியிடம் காலியாகவே உள் ளது.  முத்துப்பேட்டை நகரம் மற்றும் பக்கத்து கிராமங்களில் உள்ள மக்கள் இந்த வங்கியில் வாடிக்கையாளர் களாக உள்ளனர். அதிகளவில் ஓய்வூதி யம் பெறுவோர்களும் இந்த வங்கி யில்தான் வாடிக்கையாளர்களாக உள்ளனர். மக்கள் வங்கியில் கடன் பெறுவது பணம் கட்டுவது பணம் எடுப்பதில் பெரும் சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர்.  இதை கண்டித்தும் உடனே போது மான ஊழியர்களை நியமிக்க வேண் டும் தாமதமின்றி வங்கிக் கடன்களை அளிக்கவேண்டும் என்பதை வலி யுறுத்தியும் தமிழ்நாடு அனைத்து ஓய்வூ தியர்கள் சங்கத்தின் சார்பாக ஆர்ப் பாட்டம் முத்துப்பேட்டை ஸ்டேட் வங்கி யின் முன்பு ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. கிளைத் தலைவர் கோவி.ரெங்கசாமி தலைமை வகித்தார். கிளை செயலாளர் சி. செல்லதுரை கோரிக்கை விளக்கவுரையாற்றினார்.  தோழமை தொழிற்சங்க தலை வர்கள் பி.நடராஜன், வி.கனகசந்தரம். எல்.டி.வீரசேகரன், ஜி.துரைராஜ், என். ராஜேந்திரன் உள்ளிட்டோர் பேசி னார்கள். வங்கி மேலாளர் விக்னேஷ் ஆர்ப்பாட்ட இடத்திற்கு வந்து ஆர்ப்பாட்டக்காரர்களிடம் பேசினார். வங்கியின் மண்டல மேலாளரின் கவ னத்திற்கு ஊழியர்கள் பற்றாக்குறை யை பற்றி கொண்டு சென்றுள்ளதாக வும் இன்னும் பதினைந்து தினங்க ளுக்குள் வங்கியில் கூடுதலாக ஊழி யர்கள் நியமிக்கப்படுவார்கள் என்று வாக்குறுதி அளித்தார். முன்னதாக எம்.ஆர்.சுப்பிரமணியன் வரவேற்றார். கே.அண்ணாதுரை நன்றி கூறினார்.