tamilnadu

img

அதிகாரி மீது தாக்குதல்  நடவடிக்கை எடுக்க கோரிக்கை

 மன்னார்குடி, மே 13- திருத்துறைபூண்டி நகராட்சி பொறியாளர் மற்றும் ஆணையர்(பொறுப்பு) நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் கொரோனா தடுப்புப் பணிகளை ஆய்வு செய்த போது, நகராட்சி பழைய பேருந்து நிலையத்தில் அத்துமீறி ஒரு வார காலமாக மீன்கடை வைத்திருந்த கல்விப்பிரியன் என்பவரை வேறு இடத்திற்கு கடையை மாற்ற அறிவுறுத்தியும், தடையை மீறி கடை வைத்ததற்கு ரூ 500 அபராதம் விதிக்க சுகாதார மேற்பார்வையாளர் நா.வெங்கடாஜலத்திடம் உத்தரவிட்டு சென்றுள்ளளார்.  இதனால் ஆத்திரமுற்ற மீன் வியாபாரி கல்விப்பிரியன் அன்று பிற்பகல் அவ்வழியே வந்த சுகாதார ஆய்வாளர் நா.வெங்கடாஜலம் மீது அரிவாளால் வெட்டி தாக்கியுள்ளார். காயமடைந்த சுகாதார ஆய்வாளர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து நகராட்சி ஆணையர், காவல்துறையில் புகார் கொடுத்து நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியுள்ளார்.