tamilnadu

தூய்மைக் காவலர்களை பணி நிரந்தரம் செய்யக் கோரிக்கை

 குடவாசல்: திருவாரூர் மாவட்டம் குடவாசலில் ஞாயிற்றுக்கிழமை கிராம ஊராட்சிகளில் பணியாற்றும் தூய்மைக் காவலர்கள் மாவட்ட குழு கூட்டம் தியாகி.தங்கையன்  நினைவு கூட்டரங்கத்தில் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் எஸ்.காமராஜ் தலைமையில் நடைபெற்றது. உள்ளாட்சித் துறை ஊழியர் சம்மேளன மாநில தலைவர் நா.பாலசுப்பிர மணியன், மாவட்ட செயலாளர் கே.முனியாண்டி, குடவாசல் ஒன்றிய நிர்வாகிகள் கலியமூர்த்தி, ஆறுமுகம், மகாலிங்கம் மற்றும் தூய்மை காவலர் சங்க நிர்வாகிகள், பெண்கள் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். கூட்டத்தில், தூய்மை காவலர்களுக்கு பணி நிரந்தரம், ஊதிய உயர்வு ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் மார்ச் 16 ஆம் தேதி திருவாரூர் ஆட்சியர் அலுவலகத்தில் ஆர்ப்பாட்டம் நடத்துவது, எப்ரல் 19 ஆம் தேதி கரூரில் நடைபெறும் தூய்மை காவலர்கள் மாநில கோரிக்கை மாநாட்டில் திரளாக கலந்து கொள்வது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. 

;