tamilnadu

img

அரசுப் பள்ளி மாணவர்களை வாழ்த்திய மழையின் திருக்கரங்கள்

மன்னார்குடி, செப்.26- திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை ஒன்றியம் கரையங்காடு, கற்பகநாதர்குளம், தொண்டியக்காடு, மற்றும் நாகப்பட்டினம் மாவட்டம் துளசியாப்பட்டினம், வண்டு வாஞ்சேரி பகுதிகளில் அரசு உயர் நிலைப்பள்ளி நடுநிலை பள்ளி மற்றும் ஆரம்பப் பள்ளி மாணவர்கள், தன்னார்வ லர்கள் பொதுமக்களுடன் இணைந்து பல் லாயிரக்கணக்கான பனை விதைகளை நட்டனர்.  கூட்டு இயக்கமாக நடைபெற்ற மாண வர்களின் இத்திருப்பணி பொங்கித் ததும்பும் மகிழ்ச்சிப் பெருவெள்ளத்துடன் கட்டுக்கோப்பாக நடைபெற்றது. ஒன்றாக அமர்ந்து சாப்பிட்டார்கள். வரிசையில் நின்று தேநீர் அருந்தினார்கள். நகரத்தின் ஆடம்பர மேடைகள், படோடோப ஆரவாரங்கள், சால்வைகள், மாலைகள், புகழுரைகள் எதுவுமின்றி பகுதி பகுதியாக மொத்தம் 500 மாணவர்கள் ஆயிரக்கணக்கான (சுமார் 50 ஆயிரம்) பனை விதைகள் 5 கிலோ மீட்டர், 35 தன்னார்வலர்கள், 5 ஆசிரியர்களுடன் இணைந்து நிறைவேற்றிய பிரமிப்பூட்டும் இந்தப் பணி மாணவர்களின் சேவை உள் ளத்தை மட்டும் பறைசாற்றவில்லை. மாண வர்களின் சிந்தனையும் சக்தியும் ஓரணி யில் திரட்டப்பட்டால் எதையும் சாதிக்க முடி யும் என்பதையும் நிரூபித்துக் காட்டியது.  உண்மையான நாட்டுப் பற்றோடு அவர்களது தொண்டுள்ளம் அன்று முழு வதும் வெளிப்பட்டது. சுட்டெரிக்கும் பகல் முழுவதும் விடாது வெயிலில் நின்று பூமி யைக் கீறி விதைகளை நட்டவர்கள் அந்திக் கருக்கல் வேளையில் தங்கள் இல்லங்களை நோக்கி பயணப்பட்டனர். கரையங்காடு, கற்பகநாதர்குளம், தொண்டியக்காடு, துளசியாப்பட்டினம், வண்டுவாஞ்சேரி கிரா மங்களைச் சேர்ந்த அந்த ஏழை - எளிய அரசுப் பள்ளி மாணவர்கள் தங்கள் கரங் களை கோர்த்து, சிரித்துக் கொண்டே ஏரிக் கரை வழித்தடங்களில் நடந்தனர். வானம் அன்று மாலை தனது மழையின் மாய திருக்கரங்களால் அவர்களை வாழ்த்தி யது. அந்த கிராமங்களின் மக்களும் வாழ்த்தி னர். வனத்துறையினர் பாராட்டினர். அவர் களுக்கு உணவளித்த தன்னார்வலர்களை யும் பாராட்டினர்.  ப.தெட்சிணாமூர்த்தி, த.சூரியமூர்த்தி