tamilnadu

தமிழக வரலாற்றில் மிக மோசமானது எடப்பாடி ஆட்சி திருவாரூரில் பிரகாஷ் காரத்

தமிழகத்தைப் பொறுத்தவரை பாரதிய ஜனதா கட்சி ஒரு பெரிய சக்தி அல்ல. எனவேஅதிமுகவுடன் கூட்டணி வைத்துக் கொண்டு சிலஇடங்களையாவது பிடித்துவிடலாம் என்று அக்கட்சிகனவு காண்கிறது. தமிழக வரலாற்றிலேயே எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுகஅரசு தான் மிக மோசமான ஆட்சியை நடத்தி யிருக்கிறது. தமிழக மக்களின் நலன்களையும் தமிழகத்தின் எதிர்காலத்தையும் கருத்தில் கொள்ளாமல் மோடி அரசுக்கு அடிபணிந்து கிடக்கிறது. இதுவே அதிமுக கூட்டணியின் மிகப்பெரிய தோல்வியாகும்.கஜா புயலால் தமிழகத்தின் டெல்டா மாவட்டங் கள் வரலாறு காணாத பாதிப்பை சந்தித்துள்ளன. ஆனால் மத்திய, மாநில அரசுகள் இந்த மக்களை துயரத்தின் பிடியிலேயே நிர்கதியாக விட்டுவிட்டன. சொற்ப தொகையை நிவாரணமாக அறிவித்தன.அண்மையில் கேரளத்தில் கடந்த நூறாண்டு களில் கண்டிராத அளவிற்கு மிகப்பெரும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. ஒரு லட்சம் பேர் வீடுகளை இழந்தனர். அவர்களின் மறுவாழ்வுக்காக கேரள இடதுஜனநாயக முன்னணி அரசு தலா ரூ.4லட்சம் வழங்கியது. ரூ.21 ஆயிரம் கோடி அளவிற்கு இழப்பு ஏற்பட்டிருப்பதை கணக்கிட்டு, அந்தத் தொகையைமத்திய அரசிடம் பெறுவதற்காக மிகப்பெரும் போராட்டங்களை நடத்தியது. ஆனால் மோடி அரசு கேரள மக்களை வஞ்சித்தது. எனினும் அந்த சவாலை பினராயி விஜயன் தலைமையிலான அரசுதுணிச்சலுடனும் உத்வேகத்துடனும் எதிர்கொ ண்டது. ஆனால் தமிழகத்தில் என்ன நடக்கிறது?இங்குள்ள எடப்பாடி அரசு, தமிழகத்திற்கு தரவேண்டிய நிதியை மோடி அரசு தராத நிலை யிலும் கூட அவர்களுக்கு சேவகம் செய்து வருகிறது. இத்தகைய மக்கள் விரோத அரசை, மத்தியில் ஆட்சி மாற்றம் ஏற்படவுள்ள அதே நேரத்தில், தமிழகத்தில் நடைபெற உள்ள 18 தொகுதி சட்டமன்ற இடைத்தேர்தலைப் பயன்படுத்தி தூக்கியெறிய வேண்டும். நீடிப்பதற்கு தகுதி இல்லாத எடப்பாடி அரசு வீழ்த்தப்பட வேண்டும்.

;