திருவாரூர், செப்.9- மின் ஊழியர் மத்திய அமைப்பின் சார்பில் கவன ஈர்ப்பு போராட்டம் திரு வாரூர் மேற்பார்வை பொறியாளர் அலு வலகம் எதிரே நடைபெற்றது. மின் ஊழியர் மத்திய அமைப்பின் திட்ட தலைவர் எஸ்.சாகயராஜின் தலை மையில் நடைபெற்ற போராட்டத்தில் திட்ட துணைத்தலைவர் வி.சுப்ரமணி யன், துணைச் செயலாளர் ஆர்.இராம சாமி ஆகியோர் முன்னிலை வகித்த னர். சிஐடியு மாவட்டச் செயலாளர் டி. முருகையன், திட்டச் செயலாளர் கே. ராஜேந்திரன், கோட்டச் செயலாளர் ஜி. வீரபாண்டியன்(மன்னை), திருவாரூர் கோட்டச் செயலாளர் டி.தமிழரசன், தலைவர் ஆர்.முரளிதரன், கோட்ட தலைவர் எஸ்.மோகனசுந்தரம் ஆகி யோர் பங்கேற்று aகோரிக்கைகளை விளக்கி பேசினர். நிர்வாகிகள் ஏ.ரமணி, டி.ராஜா, ஆர்.கண்னன், டி.குமார், டி. அழகிரிநாதன், கே.வினோத், என்.பிரபு, ஆர்.விஜயா, ஜி.சந்திரசேகரன், ஜி. விஜயசாந்தி, பி.கோபால்சாமி ஆகி யோர் கலந்து கொண்டனர். ஒப்பந்த ஊழியர்களை அடையா ளங்கண்டு நிரந்தரப்படுத்த வேண்டும். முத்தரப்பு ஒப்பந்தத்தில் ஏற்றுக் கொண்டபடி ஒப்பந்த ஊழியர்களுக்கு ரூ.380-ஐ வாரியமே வழங்கிட வேண் டும் உள்ளிட்ட கோரிக்கைகள் வலி யுறுத்தப்பட்டன. நிறைவாக திட்ட பொருளாளர் எஸ்.ஜெயச்சந்திரன் நன்றி கூறினார்.