குடவாசல், அக்.16- திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் ஒன்றியத்தில், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் ஒன்றிய பேரவை நடைபெற்றது. பேரவைக் கூட்டத்திற்கு செயலாளர் டி.ஜான் கென்னடி தலைமை தாங்கினார். எம்.ஆரோக்கியதாஸ் முன்னிலை வகித்தார். வாலிபர் சங்கத்தின் மாநில துணை செயலாளர் சந்திரபோஸ் புதிய நிர்வாகிகளை அறிமுகப்படுத்தி சிறப்புரை ஆற்றினார். மாவட்டச் செயலாளர் கே.பி.ஜோதிபாசு, பொருளாளர் எஸ்.இளங்கோவன் மற்றும் பலர் கலந்து கொண்டனர். 9 பேர் கொண்ட ஒன்றிய குழுவுக்கு தலைவராக டி.பி.கிஷோர்குமார், செயலாளராக டி.ஜான் கென்னடி, பொருளாளராக எ.அருள்குமார் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். முன்னதாக கிஷோர் குமார் தலைமையில் பல்வேறு கட்சியிலிருந்து விலகி 50 இளைஞர்கள் வாலிபர் சங்கத்தில் உறுப்பினராக தங்களை இணைத்துக் கொண்டனர்.