tamilnadu

img

உடல்தான உறுதிமொழி ஏற்பு

திருவாரூர், ஆக.17- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த உறுப்பின ரும், தீக்கதிர் நாளிதழின் மாவட்ட செய்தியாளருமான எஸ்.நவமணி(60) தனது பிறந்த நாளான கடந்த வெள்ளிக்கிழமையன்று (ஆக.14) உடல்தான உறுதி மொழி ஏற்பு பத்திரத்தை அரசு திருவாரூர் மருத்துவக்க ல்லூரியில் வழங்கினார்.  இதற்கான எளிய நிகழ்ச்சி மருத்துவக்கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. இதில் மெய்யியல் துறை யின் சார்பில் மருத்துவர் வித்யா மீனா பங்கேற்று உடல்தான உறுதிமொழி பத்திரத்தை பெற்றுக் கொண்டார். அப்போது அவர் “நல்ல விஷயம் பல ரும் உங்களைப் போன்று முன்வர வேண்டும்” என கூறி  வாழ்த்து தெரிவித்தார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலா ளர் ஜி.சுந்தரமூர்த்தி உறுதி மொழி பத்திரத்தில் ஒப்புதல் கையெழுத்திட்டு வழங்கி னார். சிபிஎம் மன்னார்குடி நகர செயலாளர் எஸ்.ஆறு முகம், நகரக்குழு உறுப்பினர்  கே.அகோரம், சமூக ஆர்வ லர் ஜி.வரதராஜன், லயன்.டி.ராஜ்குமார், லிகாய் சங்க கோட்ட செயலாளர் கோ. கோபாலகிருஷ்ணன் மற்றும்  உறவினர்கள், நண்பர்கள் உடனிருந்தனர்.