tamilnadu

தஞ்சை மீனாட்சி மருத்துவமனையில் ஊடுகதிர் ஸ்கேன் வசதி தொடக்கம்

மன்னார்குடி, ஜூலை 2-  தஞ்சை மீனாட்சி மருத்துவமனையில் கதிரியக்கவியல் துறை தலைமை மருத்துவ அலுவலர் சண்முக ஜெயந்தன் வெளியிட்டுள்ள அறிக்கையில், டெல்டா மாவட்டங்களில் முதன் முறையாக முழு உடல் காந்த அதிர்வு ஊடுகதிர் ஸ்கேன் தஞ்சை மீனாட்சி மருத்துவமனையில் கதிரியக்கவியல் துறை சார்பில் துவங்கப்பட்டுள்ளது. இந்த பரிசோதனை மூலம் உடல் முழுவதும் புற்றுநோய் பரவுதலை முழுமையாகக் கண்டறிய முடியும். இந்த பரிசோதனை செய்து கொள்வதன் மூலம் நோய் எந்த அளவிற்கு உடலில் பரவியுள்ளது என்பதை கண்டறிந்து, அதற்கு ஏற்றாற்போல் சிகிச்சை எடுத்துக் கொள்ளலாம். மேற்கண்ட சிகிச்சைக்காக இனிமேல் சென்னை, கோவை நகரங்களுக்கு செல்லாமல் தஞ்சையிலேயே சிகிச்சை பெற்றுக் கொள்ளலாம் என தெரிவித்துள்ளார்.