tamilnadu

img

காப்பீட்டுக் கழக ஊழியர்கள் வெளிநடப்பு

மன்னார்குடி, பிப்.5- காப்பீட்டுக் கழகத்தை தனியார்மயமாக்க வகை செய்யும் மத்திய அரசைக் கண்டித்து மன்னார்குடியில் காப்பீட்டுக்கழக ஊழியர் கள், அதிகாரிகள், வளர்ச்சி அதிகாரிகள், முகவர்கள் என காப்பீட்டுக் கழகத்தைச் சார்ந்த அனைத்து தரப்பின ரும் ஒரு மணி நேர வெளி நடப்பு வேலை நிறுத்ததில் ஈடுபட்டனர்.  காப்பீட்டுக் கழக அலு வலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு காப்பீட்டு ஊழியர் சங்க தலைவர் கே.வி.பாஸ்கரன் தலைமை வகித்தார். வளர்ச்சி அதிகாரி கள் சங்கம் பார்த்தசாரதி, அதி காரிகள் சங்கம் சுஜாதா, சீனி வாசன், கிளை மேலாளர்  மதியழகன், லிகாய் திருமா வளவன், லியாபி அம்மை யப்பன், ஓய்வூதியர் சங்க தலைவர் இயேசுதாஸ் ஆகி யோர் கண்டன உரையாற்றி னர். பிரதிநிதி கவிமணி நன்றி கூறினார்.