tamilnadu

இந்தியன் வங்கியின் முப்பெரும் விழா

மன்னார்குடி, ஆக.27- திருவாரூர் அருகில் உள்ள புலிவலம் இந்தியன் வங்கி கிளை சார்பில் வாடிக்கையாளர் தின விழா, நிதிசார் கல்வி முகாம், மரக்கன்று நடும் விழா ஆகிய முப்பெரும் விழா புலிவலத்தில் நடைபெற்றது. வங்கியின் திருவாரூர் துணை மண்டல மேலாளர் மு.செல்வநாயகம், நிதிசார் கல்வி பற்றியும், வங்கியின் அனைத்து திட்டங்களிலும், சேவைகளிலும் அனைத்து குடும்பத்தினரும் கலந்து கொண்டு பயன் பெற வேண்டுமென வலியுறுத்தி கூறினார். இதனைத் தொடர்ந்து புலிவலம் அரசு உயர்நிலைப்பள்ளியில் மரக்கன்று நடுவதன் அவசியத்தை பள்ளி மாணவ, மாணவிகளுக்கு வங்கியின் துணை மண்டல மேலாளர் மு.செல்வநாயகம் எடுத்துக் கூறி அனைவருக்கும் மரக்கன்றுகள் பரிசாக வழங்கினார். விழாவில் வங்கியின் புலிவலம் கிளை மேலாளர் திவ்யா ராஜேந்திரன், நபார்டு வங்கி உதவி பொது மேலாளர் பேட்ரிக் மற்றும் பள்ளி ஆசிரியர்கள், மாணவ, மாணவிகள், வங்கியின் வாடிக்கையாளர்கள் கலந்து கொண்டனர்.