குடவாசல் ஆக 10- திருவாரூர் மாவட்டம் குடவாசல் ஒகை ஆற்றுப்பாலம் அருகே நான்கு முனை ரோடு சந்திப்பு பகுதியில் காவல்துறை மற்றும் வர்த்தக சங்கம் சார்பாக குற்றச் செயல்களை தடுக்கும் விதத்திலும், வாகன விபத்துகளை கண்காணிக்கும் வகையில் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டு சனிக்கிழமை இதன் துவக்க நிகழ்ச்சி நடைபெற்றது. கண்காணிப்பு கேமராவை துவக்கி வைத்து திருச்சி சரக டிஐஜி லோகநாதன் பேசினார். பின்னர் குடவாசல் காவலர் குடியிருப்பு அருகே புதிதாக அமைக்கப்பட்ட சிறுவர் பூங்காவை திறந்து வைத்து மரக்கன்றுகளை ஊன்றினார்.மாவட்ட காவல் கண்காணிப்பாளர் துரை, நன்னிலம் டிஎஸ்பி முத்தமிழ் செல்வம், குடவாசல் காவல் ஆய்வாளர் ராஜகோபால், மூலங்குடி தினகரன், அருண் மெடிக்கல் பிரபாகரன், டீலக்ஸ் காபி நிறுவனர் அப்துல்ஜப்பார், கணேசா பேக்கரி பாலாஜி, ஆதித்யா என்டர்பிரஸ் ஆதித்யா பாலு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.333333333333.