மன்னார்குடி, அக்.29- மன்னார்குடி உள்ளிட்ட டெல்டா பகுதிகளில் யூரியா உர தட்டுப்பாட்டைப் போக்க உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என மன்னார்குடி எம்எல்ஏ டிஆர்பி ராஜா வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில், இயற்கை விவசாயம் குறித்த விழிப்புணர்வு அதிகமுள்ள இக்கால கட்டத்தில் பல விவசாயிகள் படிப்படியாக இயற்கை விவசாயத்தை நோக்கி நகர்ந்து வருகிறார்கள். அதி கப்படியான கட்டுப்பாடற்ற ரசாயன உரங்களின் பயன்பாட்டால் பசுமையான விவசாய நிலங்களும் நச்சுத்தன்மை மிகுந்ததாக மாறியுள்ளன. இயற்கை யாகவே நம் மண்ணில் இருக்க வேண்டிய இயற்கை சத்துக்கள் கடந்த 30 ஆண்டுகளில் ஏறத்தாழ 50 சத வீதத்திற்கு மேல் குறைந்து விட்டன என்று வேளாண் பல்கலைக்கழகத்தின் ஆய்வறிக்கைகள் கூறுகின்றன. விவசாயத்திற்கு நன்மை செய்யும் பூச்சிகள் தேனீக்கள் மண்புழுக்கள் மற்றும் நுண்ணுயிர்கள் முற்றிலும் அழிந்து போகும் நிலையில் உள்ளன. எனவே விரைந்து நமது விவசாயிகள் இயற்கை விவசாயத்திற்கு மாறுவது அவசியம். ஆனால் இதற்கு இடைப் பட்ட காலத்தில் யூரியா போன்ற அத்தி யாவசிய உரங்கள் சரியான நேரத்தில் கிடைக்காததால் விவசாயிகள் பெரும் அவதிக்கு உள்ளாகி இருக்கிறார்கள். மன்னார்குடி சுற்று வட்டார பகுதி யில் ஏறத்தாழ 40000 ஹெக்டேர் விவ சாய நிலப் பரப்பிற்கு குறைந்தபட்சம் 7425 மெட்ரிக் டன் யூரியா தேவைப்படு கிறது. மாவட்ட அளவில் தற்போது சாகுபடி க்கு அக்டோபர் மாதம் 18000 மெட்ரிக் டன் யூரியா தேவைப்பட்டது. ஆனால் அதில் சற்று ஏறக்குறைய 5000 மெட்ரிக் டன் மட்டுமே விவசாயிகளுக்கு வழங்கப் பட்டது. அதே போல் டிஏபி 4500 மெட்ரிக் டன் தேவைப்பட்ட நேரத்தில் 2500 மட்டுமே வழங்கப்பட்டது. நவம்பர் மாதத்தில் பொட்டாஷ் 4500 மெட்ரிக் டன் தேவையிருக்கும் சூழ்நிலையில் 1400 மெட்ரிக் டன் மட்டுமே இருப்பு உள்ளது. யூரியா 14000 மெட்ரிக் டன் தேவையிருக்கும் சூழ்நிலையில் தற்போ தைய இருப்பு 2500 மெட்ரிக் டன் மட்டுமே உள்ளது. எனவே யூரியா உரத் தட்டுப் பாட்டை போக்கி, விவசாயிகளுக்கு வேளாண் கூட்டுறவு மையங்கள் மூலம் மானிய விலையில் உரங்களை வழங்கிட உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று டிஆர்பி ராஜா எம்எல்ஏ கூறியுள்ளார்.