tamilnadu

img

ஹைட்ரோ கார்பன் திட்ட எதிர்ப்பு பேரவை

திருவாரூர், ஜூன் 3-மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஹைட்ரோ கார்பன் திட்ட எதிர்ப்பு சிறப்பு பேரவை கூட்டம் திருவாரூர் அருகே கூடூரில் நடைபெற்றது. ஒன்றிய செயலாளர் என்.இடும்பையன் தலைமையேற்றார். மாவட்ட செயலாளர் ஜி.சுந்தரமூர்த்தி, ஹைட்ரோ கார்பன் திட்ட செயலாக்க அபயாம் குறித்தும், விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்கள் மற்றும் பொது மக்கள் அனைவரையும் அணித் திரட்ட வேண்டிய அவசியம் குறித்தும் உரையாற்றினார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஜி.பழனிவேல், மாவட்டக்குழு உறுப்பினர்கள் கே.ரங்கசாமி, பி.ஆர்.சாமியப்பன், எஸ்.ராமசாமி, நகரசெயலாளர் எம்.பாலசுப்ரமணியன் உடபட திரளானோர்  கலந்து கொண்டனர். வரும் 6-ஆம்தேதி முதல் 10 ஆம் தேதி வரை நடைபெறவுள்ள இருசக்கர வாகன விழிப்புணர்வு பேரணியை சிறப்பாக நடத்திடவும் கூட்டத் தில் தீர்மானிக்கப்பட்டது.

;