மன்னார்குடி, ஜூன் 2- முத்துப்பேட்டை நகரத்தின் 10-வது வார்டு பேட்டை தெப்பத்தான வெளி ஆதிதிராவிடர் சாலை செப்ப னிடப்பட்டு சீர் செய்திட வேண்டும். பழுதமடைந்த ஆதிதிராவிடர் மயா னக் கொட்டகையை வடிமுனை குழாய் தண்ணீர் வசதியுடன் புதிதாக கட்டித் தர வேண்டும். காளியம்மள் கோயில் வாய்க்கால் படித்துரை களை செப்பமிட்டு சீர் செய்திட வேண்டும் என்ற கோரிக்கை தீர்மா னங்கள் முத்துப்பேட்டை நகர 10-வது வார்டிற்குட்பட்ட பேட்டை பகுதி கிராமக் கமிட்டியில் நிறை வேற்றப்பட்டன.
புதிதாக உருவாக்கப்பட்ட பேட்டை கிராமக்கமிட்டி கே.முருகா னந்தம் தலைமையில் நடை பெற்றது. கமிட்டிக் கூட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயற்குழு உறுப்பினர் கே.தமிழ்மணி, முத்துப்பேட்டை ஒன்றியச் செயலாளர் கே.பாலசுப்பி ரமணியன், முத்துப்பேட்டை நகரச் செயலாளர் சி.செல்லதுரை, கிளைச் செயலாளர் கே.பாண்டியன், ஜன நாயக வாலிபர் சங்க ஒன்றிய செய லாளர் எம்.சரவணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டார்கள். நிறைவாக மாவட்டச் செயற்குழு உறுப்பினர் கே.தமிழ்மணி, கிராமங்கள் தோறும் கிராமக் கமிட்டிகள் உயி ரோட்டமாக செயல்பட்டால் அந்த பகுதி மக்களின் கோரிக்கைகளில் எளிதாக வெற்றியை அடைய முடியும் என்றார்.