குடவாசல், பிப்.16- திருவாரூர் மாவட்டம் கொர டாச்சேரி ஒன்றியம் கிளாரியத்தில் சிபிஎம் தோழர் டி.ராமமூர்த்தி தனது புதிய இல்லத்திற்கு ரமா பதி இல்லம் என்று பெயர் சூட்டி இல்ல திறப்பு விழா நிகழ்ச்சி ஞாயிற் றுக்கிழமை நடைபெற்றது. விழாவிற்கு கொரடாச்சேரி ஒன்றிய செயலாளர் கே.சீனி வாசன் தலைமை ஏற்று வரவேற் றார். ஊரக வளர்ச்சி துறை மாவட்ட செயலாளர் கே.எஸ்.செந்தில் முன்னிலை வகித்தார். மார்க்சிஸ்ட் கட்சியின் மாநில குழு உறுப்பினர் ஐ.வி.நாக ராஜன், ரமாபதி இல்லத்தை திறந்து வைத்து வாழ்த்துரை வழ ங்கினார். கட்சியின் மாவட்டச் செயலாளர் ஜி.சுந்தரமூர்த்தி, மார்க்சிய தலைவர்கள் உரு வப்படங்களை திறந்து வைத்தார். நிகழ்ச்சியில் மாவட்ட செயற் குழு உறுப்பினர்கள் எம்.சேகர், பி.கந்தசாமி, ஊரக உள்ளாட்சி துறை மாவட்ட செயலாளர் கே.எஸ் செந்தில் மற்றும் வி.ச. ஒன்றிய தலைவர் பி.பரமசிவம், கட்சி கிளை செயலாளர் எம்.கலியபெருமாள் உள்ளிட்டோர் மற்றும் தோழமை சங்கத்தினர், அரசு ஊழியர்கள், கட்சி ஒன்றி யக்குழு உறுப்பினர்கள் உள்ளி ட்டோர் கலந்து கொண்டனர்.